ஆப்நகரம்

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் 'மாநாடு' படம் பார்த்த கலெக்டர்: நெகிழ்ச்சி சம்பவம்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து சிம்பு நடித்த 'மாநாடு' படத்தை கண்டுகளித்துள்ளனர்.

Samayam Tamil 6 Dec 2021, 5:31 pm
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil Maanaadu
Maanaadu


'மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

'மாநாடு' படம் கடந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். தீபாவளிக்கு முன்பாக 'மாநாடு' படத்தின் ரிலீஸ் நவம்பர் 25 ஆம் தேதி மாற்றியுள்ளதாக அறிவித்தனர். இதனிடையில் ரிலீசுக்கு முன்தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான 'மாநாடு' படம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
தேசிய விருது வென்ற இயக்குனர் படத்தில் சிம்பு: குஷியில் ரசிகர்கள்!
இந்நிலையில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குழந்தைகளுடன் இணைந்து சிம்பு நடித்த 'மாநாடு' படத்தை கண்டுகளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் இணைந்து திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் 'மாநாடு' படத்தை பார்த்துள்ளனர். கலெக்டர் மற்றும் எஸ்பியின் இந்த செயல் பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்