இயக்குனர் ஹரியின் சிங்கம், சிங்கம் -2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா எஸ்-3 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார் என்று தகவல் வெளிவந்தது. தற்போது இப்படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இது சூர்யாவின் 35வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெயிண்ட் நிறுவனம் 35வது படத்தின் டைட்டிலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் 35வது படத்தின் பாடல் வரியானது படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் டயலாக். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தின் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் 35வது படத்தின் பாடல் வரியானது படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் டயலாக். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தின் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.