ஆப்நகரம்

சினிமா துறைக்கு அனுமதி கொடுத்த அரசு! ஆனால் இத்தனை பேர் மட்டும் தான் இருக்கனும்

கொரோனா லாக்டவுனில் சில கட்டுப்பாடுகளுடன் சினிமா போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 9 May 2020, 8:50 am
கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறை முழுமையாக முடங்கி இருந்தது. மற்ற பல துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது போல சினிமா துறை குறைந்த ஆட்களுடன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் FEFSI சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
Samayam Tamil Master


கொரோனா லாக்டவுனால் கிட்டத்தட்ட 500 கோடி ருபாய் முதலீடு சினிமா துறையில் முடங்கி இருக்கிறது என்றும் தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று அரசு போஸ்ட்-ப்ரோடக்ஷன் பணிகள் 11.5.2020 முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதனால் மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் பணிகள் மிண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன் முழு விவரம் இதோ..

படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)
குரல் பதிவு (Dubbingg) (அதிகபட்சம் 5 பேர்)
கம்ப்யூட்டர் மாற்று விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) (10 முதல் 15 பேர்)
டிஐ (DI) எனப்படும் நிற கிரேடிங் - (அதிகபட்சம் 5 பேர்)
பின்னணி இசை (Re-Recording) - (அதிகபட்சம் 5 பேர்)
ஒலிக்கலவை (Sound Design/Mixing) - (அதிகபட்சம் 5 பேர்)

Post Production பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்படினியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பனி செய்வதை உறுதி செய்யவேண்டும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்