ஆப்நகரம்

மின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நடிகை விஜயலட்சுமியும் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jun 2020, 10:00 am
கொரோனா வைரஸ் லாக்டவுனில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று பிரசன்னா ட்விட்டரில் கேட்டார். அதை பார்த்த பலரும் எங்களுக்கு கூடுதல் கட்டணம் வந்துள்ளது என்று பதில் அளித்தனர். லாக்டவுனில் பலர் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி பகல் கொள்ளை அடிக்கிறதே என்று பலர் வருத்தம் தெரிவித்தனர்.
Samayam Tamil vijayalakshmi


எங்கள் வீட்டுக்கு ரூ. 70 ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் வந்துள்ளது. இதை என்னால் கட்ட முடியும் ஆனால் சாதாரண மக்களால் முடியுமா என்று பிரசன்னா தெரிவித்தார். இதை பார்த்த மின்சார வாரியமோ அந்த ரூ. 70 ஆயிரத்திற்கான பில்லுக்கு கணக்கு காட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை பார்த்த பிரசன்னா ட்விட்டரில் கூறியதாவது,

உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌ , மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மை தான்‌. அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌
நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை.

அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்து கொள்ளவே என்‌ ட்வீட்‌. மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்சனையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையோ, அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்.‌
மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

"பி.கு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி
இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌." என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது என்று எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று பிரசன்னா போட்ட ட்வீட்டுக்கு நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான விஜயலட்சுமியும் பதில் அளித்துள்ளார். விஜயலட்சுமி கூறியிருப்பதாவது,

ஓ மை காட். அவர்களை நம்பவே முடியவில்லை. கடந்த இரண்டு முறையாக எங்கள் பில் தொகையை இரட்டிப்பாக்கி அதை செலுத்தவும் சொல்லியுள்ளனர். எங்களுக்கு வேறு வழியில்லை ஏனென்றால் இது தமிழ்நாடு மின்சார வாரம். பதில் சொல்லக் கூட அங்கு யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் கமெண்ட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் சிலர், நீங்கள் சொல்வது சரி தான். உங்களை போன்று பலருக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. லாக்டவுன் நேரத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். அவர்கள் மாதாமாதம் ரீடிங் எடுக்க வராமல் மொத்தமாக பில் போடுவதால் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்