ஆப்நகரம்

அழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவாதத்தில் வனிதா vs மீரா மிதுன்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தினந்தோறும் சோகத்துடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோரது சண்டையால் சோகத்துடனேயே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 28 Jun 2019, 9:42 am
விஜய் தொலைக்காட்சியில் 3ஆவது முறையாக பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 15 போட்டியாளர்களுடன் சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் களமிறங்கினார். இவரது வருகையைத் தொடர்ந்து பிக் பாஸ் வீடு ஒரே ரணகளமாக மாறியது. தினந்தோறும் மீரா மிதுன், அபிராமி, சாக்‌ஷி அகர்வால், வனிதா ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம்.
Samayam Tamil vanitha


நேற்றைய நிகழ்ச்சியின் போது சரவணன், மதுமிதா மற்றும் தர்ஷன் ஆகியோர் தங்களது குடும்பக் கதையை கூற பிக் பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது. நடிகர் சரவணன் குழந்தை வேண்டும் என்பதற்காகவே 2ஆவது திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு மகன் இருக்கிறான் என்று பெருமையோடு பேசினார். மேலும், தனது காதல் மனைவி தான் எனக்கு சோறு போட்டார். அவர் தான் எனக்கு 2ஆவது திருமணமும் செய்து வைத்தார் என்று கூற, குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தொடர்ந்து மதுமிதா கொஞ்சம் ஓவர் தான். அவர் பேசியது சின்னப்புள்ள தனமாக இருந்தது.

Episode 4 Updates: மனைவி காசுல வாங்கி சாப்பிட்டேன்; மகனுக்காக செகண்ட் ஆப் லைஃப் - சரவணன் கண்ணீர் கதை!


இந்த நிலையில், இன்றைய முதல் புரோமோ வீடியோ மூலம், இன்றைய டார்க்கெட்டும் மீரா மிதுன் என்றே தெரிகிறது. ஆனால், இதில் அபிராமி சிக்கவில்லை. அவருக்குப் பதிலாக கேப்டன் வனிதா அகப்பட்டுக் கொண்டார். தொடர்ந்து மீரா மிதுன் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் டார்க்கெட் செய்யப்பட்டு வருகிறார். சரி, இன்றைய நிகழ்ச்சியில், டெய்லி என்ன அழ வைக்கலேனா இவங்க யாருக்குமே தூக்கம் வராது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. இங்க வந்ததிலிருந்து நிறைய வேலை செய்திருக்கிறேன் என்று கேமராவிற்கு தெரியும்.இப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது.

அதுக்குள்ளேயேவா…! பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரிகள் லீக்!

அது என்னோட கேரக்டரும் இல்லை என்று அழுதுக் கொண்டே மீரா மிதுன் பேச அவரை சாக்‌ஷி முதல் பலரும் ஆறுதல் படுத்துகின்றனர். இதற்கிடையில், வனிதா கூறுகையில், இவளோட போதைக்கு நான் ஊறுகாய் இல்லை. கொடுக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக கொடுப்பேன். நமக்கு பின்னணி இல்லையா? இல்ல பாப்புலாரிட்டி தான் இல்லையா? அவளுக்காக நம்மை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறாள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்