ஆப்நகரம்

அதிக விலை டிக்கெட்: அரசுக்கு வரிகட்ட மறுத்த நடிகர் மகேஷ்பாபு!

தன் தியேட்டரில் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்ட மறுத்து வருகிறார் பிரபல நடிகர் மகேஷ் பாபு.

Samayam Tamil 21 Feb 2019, 2:21 pm
தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார். இந்நிலையில் பலகோடி செலவில் சென்ற ஆண்டு ஒரு புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை தொடங்கினார் நடிகர் மகேஷ்பாபு. இந்த தியேட்டரில் முதல் படமாக ரஜினியின் ‘2.0’ படம் அங்கு திரையிடப்பட்டது.
Samayam Tamil mahesh-babu


சமீபத்தில் அரசு சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்திருந்தது. அதனால் நாடு முழுவதும் டிக்கெட் விலைகள் குறைந்தது. ஆனால் நடிகர் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான ‘ஏ.எம்.பி.’ சினிமாஸ் மல்டி பிளெக்ஸில் டிக்கெட் விலையை குறைக்காமல் இருந்துள்ளனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் 35 லட்சம் அதிகம் லாபம் கிடைத்துள்ளது.

இது பற்றி அறிந்த அதிகாரிகள் தற்போது சோதனை செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய கம்ன்ஸ்ஷுமர் வெல்பேர் பண்ட்டுக்கு ரூ.35 லட்சம் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். ஆனால் 35 லட்சம் என்பது அதிகமான தொகை, எங்களுக்கு 20 முதல் 25 லட்சம் வரை தான் வரிகுறைப்பால் லாபம் கிடைத்துள்ளது. எங்களால் அவ்வளவு தொகையை கட்டமுடியாது என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்