ஆப்நகரம்

Suriya38: சூர்யாவுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணைந்து நடிக்கிறார்.

Samayam Tamil 10 Apr 2019, 5:56 pm
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணைந்து நடிக்கிறார்.
Samayam Tamil suriya


நடிகர் சூர்யா, நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்ஜிகே.இந்தப் படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து படம் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

மேலும் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘காப்பான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். மேலும் படத்தில் இவர்களுடன் நடிகர்கள் மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்