ஆப்நகரம்

வருமான வரி சோதனை நடக்குமோ என சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பீதி!

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சமீபத்தில் நடித்த படங்கள் பெரும் வசூலை ஈட்டியுள்ளதால், அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் எந்நேரமும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

TNN 1 Feb 2017, 5:35 pm
சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சமீபத்தில் நடித்த படங்கள் பெரும் வசூலை ஈட்டியுள்ளதால், அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் எந்நேரமும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tollywood actors are in a fear of income tax raid
வருமான வரி சோதனை நடக்குமோ என சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பீதி!


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததோடு, கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள பெரும் தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் வீடுகள், அலுவலகங்களில் திடீர் திடீரென வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதும் வழக்கமாகியுள்ளது.

சமீபத்தில், இந்திய சினிமா உலகில் பெரும் வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது பல சினிமா பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றோர் நடித்து, பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான படங்களின் வசூல், ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை அவர்களே செய்தியாளர்களை சந்தித்து, ஒப்புக் கொண்டும் உள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் கிடைக்காமலேயே, வருமான வரித்துறையினர், ரெய்டு நடத்துவது வழக்கமான சூழலில், சிரஞ்சீவி போன்றோரின் செய்தியாளர் சந்திப்பு, அதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தெலுங்கு சினிமா நடிகர்களைவிடவும், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே அதிக பீதியில் உள்ளனர். ரெய்டில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என பலரும் தங்களுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் ஆதரவை நாடுவதாக, தகவல் கூறப்படுகிறது.

Tollywood actors are in a fear of Income Tax Raid.

அடுத்த செய்தி

டிரெண்டிங்