ஆப்நகரம்

அதிக சம்பளத்தில் ‘ஈகோ’ தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் பிரியா வாரியர்!

‘ஈகோ’ பட தயாரிப்பாளர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியுள்ளார் நடிகை பிரியா வாரியர்.

Samayam Tamil 2 Apr 2018, 6:57 pm
‘ஈகோ’ பட தயாரிப்பாளர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியுள்ளார் நடிகை பிரியா வாரியர்.
Samayam Tamil priya-varrier


மலையாளத்தில் ‘ஒரு ஆதார் லவ்’ என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருபவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தனது புருவ அசைவு மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவருக்கு இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே, மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

அந்தவகையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஈகோ’ என்கிற படத்தின் தயாரிப்பாளர், பிரியா வாரியரை தங்களது புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதற்காக பிரியா வாரியாருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். ‘ஈகோ’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆசிஷ் ராஜ் தான் இந்தப்படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்