ஆப்நகரம்

Rajinikanth: நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது: ரஜினி

நாளை தனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 11:42 am

ஹைலைட்ஸ்:

  • தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினி
  • விருது பெறும் முன்பு ரஜினி அறிக்கை

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil rajinikanth

தேசிய விருதுகள் வழங்கும் விழா நாளை டெல்லியில் நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE" என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP" மூலமாக பதிவிடலாம்...இந்த வரவேற்க்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP"-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
நான் தாதா சாகேப் பால்கே விருது பெறும்போது கே.பி. இல்லையே என வருத்தம்: ரஜினிதனக்கு தாதா சாகேப் விருது கிடைக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினி. இருப்பினும் இந்த நேரத்தில் கே. பாலசந்தர் இல்லையே என வருத்தமாக இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்