ஆப்நகரம்

மணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்!

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த பிரம்மாண்ட படத்தில் முன்னணி நடிகர்கள் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

Samayam Tamil 15 Dec 2018, 3:42 pm
மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப்படத்தை அடுத்து, மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
Samayam Tamil manirathnam


ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தள்ளிக்கொண்டேபோன ‘பொன்னியின் செல்வன்’ கதையும் ஒன்று என கூறப்படுகிறது. அதோடு இந்த கதையில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி ஆகிய மூவரையும் நடிக்க வைக்கலாம் என்கிற திட்டத்தில் அவர்களுக்கு கதையின் கருவை மணிரத்னம் அனுப்பியுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பிரம்மாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பை இயக்குனர் மணிரத்னம் 2019 தொடக்கத்தில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்