ஆப்நகரம்

சத்தமே இல்லாமல் டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்த டாப்ஸ்டார் பிரசாந்த்!

டாப் ஸ்டார் பிரசாந்த், சத்தமே இல்லாமல், புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 28 Nov 2018, 5:33 pm
சமீபத்தில் தென்மாவட்டத்தை உலுக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கும்பகோணம் உட்பட பல மாவட்டங்கள் சேதமடைந்துள்ளன. பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, விஜய் சேதுபதி என பலரும் லட்சக்கணக்கில் கொடுத்து உதவியுள்ளனர்.
Samayam Tamil prasanth


இந்நிலையில் டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்தும், புயலால் பாதிக்கப்பட்ட இடத்துக்கே நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார். அவர் அங்குள்ள மக்களுக்கு போர்வை வழங்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடி வருகிறார் பிரசாந்த். இவர் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்தது பெரிய விஷயம் தான் என பலரும் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்