ஆப்நகரம்

தன் வீட்டை மக்கள் முகாமாக மாற்றிய பிரபல நடிகர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக தன்னுடைய வீட்டை ஒரு முகாமாக மாற்றியுள்ளார் நடிகர் டோவினோ தாமஸ்.

Samayam Tamil 18 Aug 2018, 4:15 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக தன்னுடைய வீட்டை ஒரு முகாமாக மாற்றியுள்ளார் நடிகர் டோவினோ தாமஸ்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90


கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கன மழையுடன் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வீட்டை இழந்து பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட் சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு கேரள முதலமைச்சரும் கேட்டுக் கொண்டார். தற்போது அதன் பேரில் பொதுமக்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தன் வீட்டை ஒரு முகாமாக மாற்றியுள்ளார். இவர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே நேரடியாக சென்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்