ஆப்நகரம்

நடிகை ஷெரின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. காதலன் தலைமறைவு..!

நடிகையும் மாடலுமாகிய திருநங்கை செரீன் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலனை தேடி வருகின்றனர் போலீசார்.

Samayam Tamil 19 May 2022, 6:16 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் கேரள நடிகையும் மாடலுமாகிய திருநங்கை செரீன் செலியின் மாத்யூவை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர் போலீஸ். ஆலப்புழையைச் சேர்ந்த இவர், பல நாட்களாக இந்தக் குடியிருப்பில்தான் இருந்து வந்துள்ளார். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் திருநங்கையர் பலரும் வசித்துவருகின்றனர்.
Samayam Tamil Sherin Celin Mathew
Sherin Celin Mathew


கடந்த மே16 ஆம் தேதி முதல் செரீன் அறையை விட்டு வெளியில் வராததால் வீட்டைத் திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டுள்ளனர். வீடியோ அழைப்பு செய்தபடி அவர் தூக்கில் தொங்கியுள்ளார் என கூறப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால், யாருக்கு அழைத்தார் என்ற விபரம் வெளியிடப்பட்டவில்லை. மேலும் அங்குப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைத் தாள்கள் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் ஏற்கெனவே செரீன், தான் மனக் கஷ்டத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முன், நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் ஷெரினுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். அதில், ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பது குறித்து தெரியவந்தது. காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கத் துவங்கியுள்ளனர் போலீஸ்.
Vijay: 'பீஸ்ட்' படம் தோல்வியா..?: உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்.!
இதனிடையில், ஷெரினின் காதலன் என்று சொல்லப்பட்டவர் தலைமறைவு ஆகியுள்ளார். தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர். ஷெரினின் காதலன் போலீசில் பிடிபட்ட பின்னரே, இந்த இறப்பில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷெரினின் தற்கொலை கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்