ஆப்நகரம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி!

இறந்த கர்ப்பிணி பெண் உஷா குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 5:57 pm
இறந்த கர்ப்பிணி பெண் உஷா குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளார்.
Samayam Tamil trichy pregnant woman death kamalhaasan party makkal neethi maiyam announces rs 10 lakh solatium
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி!


திருச்சி, திருவெறும்பூரில் உஷா என்ற கர்ப்பிணி பெண் தனது கணவருடன் டூவிலரில் சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ் உதைத்தால் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில், ‘‘தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன், வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை, எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும் நியாயமும் தெரியும். திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுசாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்