ஆப்நகரம்

“திரிஷா நடிப்பை தொடரவே முடியாது”! : கோபத்தில் நடிகர் கருணாஸ்

“திரிஷா நடிப்பை தொடரவே முடியாது”! : கோபத்தில் நடிகர் கருணாஸ்

TOI Contributor 15 Jan 2017, 8:37 pm
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை திரிஷா பீட்டாவுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். பின்னர் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கை யாரோ முடக்கிவிட்டனர் என்று கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பலரும் சரமாரியாக திரிஷாவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தையே திரிஷா மூடிவிட்டார்.
Samayam Tamil trisha cant continue her career as actress says karunaas
“திரிஷா நடிப்பை தொடரவே முடியாது”! : கோபத்தில் நடிகர் கருணாஸ்


இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நடிகரும், அதிமுக எம்எல்ஏவான கருணாஸ் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது செய்வோம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திரிஷாவின் டுவிட்டர் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கருணாஸ், பீட்டாவின் அங்கமாக உள்ள திரிஷா அந்த அமைப்பில் இருந்து விலகும் வரை அவர் எந்த படத்திலும் நடிக்க முடியாது என்றும், அதுவரை அவர் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுப்போம் என்று கருணாஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்