ஆப்நகரம்

ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் த்ரிஷா? குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகை த்ரிஷா திடீரென தனது பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கி இருக்கிறார்.

Samayam Tamil 18 Aug 2020, 12:01 pm
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். அதனாலேயே அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பின்பற்றி வருகிறார்கள். இன்ஸ்டாக்ராமில் அவரை 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.
Samayam Tamil Trisha


இன்ஸ்டாகிராமில் த்ரிஷா வெளியிடும் புகைபடங்கள் ஒவ்வொன்றுக்கும் மிக அதிக அளவில் லைக்குகள் குவியும். குறைந்தபட்சம் அவரது புகைப்படங்களுக்கு மூன்று லட்சம் லைக்குகள் வந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பதை த்ரிஷா ஒருபோதும் செய்ததில்லை. மற்ற நடிகைகள் சோப்பு விளம்பரம், cosmetics விளம்பரம் என செய்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவு சம்பாதிக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா ஒருபோதும் அப்படி செய்ததில்லை. ரசிகர்களுக்காக மட்டும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்னிலையில் த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. மற்ற பழைய புகைப்படங்களை திடீரென நீக்கிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று தான் ரசிகர்களும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.


மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்று கூட சில ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தன்னுடைய கணக்கு ஹேக் ஆகவில்லை என த்ரிஷா தெரிவித்திருக்கிறார். தற்போது தான் அனைத்து விஷயங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மூலமாக பதிவிட்டு வருவதாகவும், மேலும் கணக்கில் இருக்கும் பழைய விஷயங்களை நீக்க முடிவு எடுத்ததாகவும் த்ரிஷா கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷா தான் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படங்களின் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் த்ரிஷா அவருடைய வீட்டிலேயே தான் இருக்கிறார். அதனால் சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பது தன் மனதிற்கு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்து இருந்தார். அதன் பின் சில வாரங்கள் கழித்து மீண்டும் அவர் சமூக வலைதளங்களுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தற்போது தன் கைவசம் பல்வேறு படங்களை வைத்து இருக்கிறார். அதில் பிரமபதம் விளையாட்டு படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை சர்ச்சையாக இருக்கிறது என கூறி சில எதிர்ப்புகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் என்ற படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். அந்த படம் ட்ராப் ஆகி விட்டது என்று கூட செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வந்தது. ஆனால் அது வதந்தி என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறி இருந்தார்.

அடுத்து த்ரிஷா இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங்கிங்கும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதிபுருஷ்.. பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட வரலாற்று படம்! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்