ஆப்நகரம்

த்ரிஷ்யம் கூட்டணியில் இணைந்த த்ரிஷா !!

'த்ரிஷ்யம்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் மோகன்லால், இயக்குநர் ஜீத்து ஜோசப் இணையும் புதிய படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளார்.

Samayam Tamil 10 Sep 2019, 11:29 am
2013 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த படம் 'த்ரிஷ்யம்'. மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்து, இந்தியா முழுக்க பல மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படம்.
Samayam Tamil 56498630_2367333776822226_3068275299973070848_o


தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப்பே இயக்க, 'பாபநாசம்' எனும் பெயரில் இப்படம் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்பொது மோகன் லால் , ஜீத்து ஜோசப் கூட்டணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து, ஒரு புதிய படத்தினை உருவாக்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல்முறையாக மோகன்லால் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் நடிகை த்ரிஷா நடிக்கும் இரண்டாவது படம் இது. கடந்த ஆண்டு வெளியான 'ஹே ஜூட்' எனும் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக முதல் மூரை மலையாளத்தில் நடித்திருந்தார். பத்து வருடங்க்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா நடிகர் மோகன்லாலுடன் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும்.

மோகன்லால் த்ரிஷா


இயக்குநர் ஜீத்து ஜோசப் தற்போது தமிழில் நடிகர் கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் திரில்லர் கலந்த கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கி வருகிறார். கார்த்தி, ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடிப்பதால மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம் த்ர்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்கு பிறகு மோகன் லால், த்ரிஷா நடிக்கு படத்தை அவர் இயக்க உள்ளார். அப்படமும் திரில்லர் கலந்த கமர்ஷியல் படமாகவே இருக்குமாம்.

த்ரிஷியம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி என்பதால் ரசிகர்கள், ஒரு புதிய அனுபவத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்