ஆப்நகரம்

நயன்தாராவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான் - த்ரிஷா!

முன்னனி நடிகைகளான நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது உண்மைதான் என த்ரிஷா ஒப்புக்கொண்டுள்ளார்.

TNN 3 Nov 2016, 12:06 am
முன்னனி நடிகைகளான நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது உண்மைதான் என த்ரிஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
Samayam Tamil trisha open up about her misunderstanding with nayanthara
நயன்தாராவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான் - த்ரிஷா!


த்ரிஷா திரைத் துறைக்கு வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் நெருங்க உள்ளது. இவரின் திரை வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தது. இருப்பினும் முன்னனி கதாநாயகியாக இன்றளவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்கள் கையில் வைத்தும் உள்ளார்.


சமீபத்தில் நயன்தாராவுக்கும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான் என த்ரிஷா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அது திரைத்துறை சம்பந்தப்பட்டது இல்லை என்றும், நாங்கள் இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் நல்ல நண்பர்களும் கூட என தெரிவித்துள்ளார் த்ரிஷா. அதோடு எங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு குறித்து தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

தீபாவளிக்கு த்ரிஷா நடிப்பில் கொடி திரைப்படமும், நயன்தாரா நடிப்பில் காஷ்மோரா-வும் வெளிவந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இரு படங்கள் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த படங்களில் நடித்தது குறித்து இரு நடிகைகளும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளனர்.

Trisha,misunderstanding,Nayanthara,film industry,heroine, Kaashmora,Kodi,friendship, கொடி, காஷ்மோரா, திரிஷா, த்ரிஷா, நயன்தாரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்