ஆப்நகரம்

கலைஞர் நினைவிடத்தில் நடிகை த்ரிஷா மலரஞ்சலி!

கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் நடிகை த்ரிஷா கீழே விழுந்து வணங்கி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

Samayam Tamil 9 Aug 2018, 5:42 pm
கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் நடிகை த்ரிஷா கீழே விழுந்து வணங்கி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
Samayam Tamil 57e9e508bbd4d0e318a152c36bb29407


தமிழ் எழுத்தாளரும், முதுபெரும் அரசியல் தலைவருமான திமுக தலைவர் கருணாநிதி நம்மைப் விட்டு பிரிந்து இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. நேற்று அவரது பூதஉடலை அரசு மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நேற்று ரவு நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தைப் நேரில் பார்த்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர். இந்த நிலையில் அங்கு கூடாரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் இன்று காலை முதலே கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் முன்னணி நடிகையான த்ரிஷா, கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் திருவுருவப் படத்தைப் பார்த்து கீழே விழுந்து வணங்கி மரியாதை செய்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்