ஆப்நகரம்

இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் வீடியோ கால் பேசிய த்ரிஷா: வைரலாகும் போட்டோ

நடிகை த்ரிஷா தற்போது கொரோனாவால் வீட்டிலேயே இருக்கிறார். நேரத்தை போக்க அவர் தெலுங்கு நடிகர் ராணா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் அவர் வீடியோ காலில் பேசியுள்ளார்.

Samayam Tamil 30 Mar 2020, 12:55 pm
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் யாரும் வெளியில் வர கூடாது என கூறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
Samayam Tamil Trisha


இன்று மட்டும் புதிதாக 17 பேருக்கு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 67ஆக உயர்ந்துள்ளது.

மேலும் யாரும் வெளியில் வர வேண்டாம் என பிரபலங்களும் மக்களுக்கு அறிவுரை கூறி தொடர்ந்து விடீயோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி பிரபலங்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் சமயத்தில் என்ன செய்கின்றோம் என்பதை காட்ட போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தான் தெலுங்கு நடிகர் ராணா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் வீடியோ காலில் பேசியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.


"இந்த கிராக்குகள் எனக்கு கம்பெனி கொடுக்கிறார்கள்" என அவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார் அவர். த்ரிஷா மற்றும் ராணா இருவரும் நெருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அல்லு அர்ஜூனுடன் அவர் நட்பில் இருப்பது தற்போது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.

மேலும் சில நாட்கள் முன்பு கொரோனா விழிப்புணர்வுக்காக த்ரிஷா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார. அதுவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்