ஆப்நகரம்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா... இன்னும் கனவில் தான் இருக்கேனோ... நம்பாத நடிகை த்ரிஷா!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது குறித்து நடிகை த்ரிஷா இன்னும் கனவில் இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Aug 2018, 6:40 pm
சென்னை: சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது குறித்து நடிகை த்ரிஷா இன்னும் கனவில் இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 6


காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை மெர்க்குரி, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் 40 நாட்கள் மட்டுமே நடிக்கும் ரஜினிகாந்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

நீண்ட நாள் கனவு....
இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு தவிர, தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், பாபி சிம்ஹா ரஜினியின் மூத்த மகனாகவும், சனந்த் ரெட்டி இளைய மகனாகவும் வருகின்றனர். மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டியின் ஜோடியாக நடிக்கிறார்.

இன்னும் கனவுதானா....
இந்நிலையில் இத்தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில்,’ சில நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் கனவில் தான் இருப்பது போல இருக்கும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்