ஆப்நகரம்

வீட்டில் தனியே எரிந்து கிடந்த மலையாள நடிகை

கேரளாவில் டிவி சீரியல் நடிகை எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 3:10 pm
மலப்புரம்: கேரளாவில் டிவி சீரியல் நடிகை எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil gossip9-1524551599


கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள டிவி சீரியல் நடிகை கவிதா. அவருக்கு திருமணமாகி 4 வயதில் மகள் உள்ளார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் தனியே வசித்து வருகிறார். இருவருக்கும் ஏற்பட்ட இடையே பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பெங்களூரில் அழகு நிலையம் தொடங்க நினைத்திருக்கிறார் கவிதா. ஆனால், பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கவிதா மலப்புரத்தில உள்ள தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கவிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் உள்ளன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்