ஆப்நகரம்

முடியல சாமி முடியல, இந்த நடிகையின் அலப்பறையை தாங்க முடியல

நடிகை கிரண் ட்விட்டரில் செய்யும் அலப்பறைகளை பார்த்து நெட்டிசன்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

Samayam Tamil 21 May 2020, 6:39 pm
சீயான் விக்ரமின் ஜெமினி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனின் உறவினரான கிரண். கொழுக் மொழுக் என்றிருந்த கிரணை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கித் தான் போனார்கள். அடுத்ததாக அஜித்துடன் சேர்ந்து வில்லன் படத்தில் நடித்தார். மூன்றாவது படத்திலேயே உலக நாயகன் கமல் ஹாஸன் ஜோடியானார். வின்னர் படத்தில் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்தார் கிரண்.
Samayam Tamil kiran


விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படத்தில் மாமியாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். அப்படியே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

39 வயதாகும் கிரண் அம்மா வேடங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். விஷாலின் ஆம்பள படத்தில் அவருக்கு அத்தையாக நடித்தார். படத்தில் தான் அத்தை, அம்மா கதாபாத்திரம் எல்லாம். ட்விட்டரில் பார்த்தால் கிரண் வேறு மாதிரி இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும் பிறப்பித்தார்கள் இந்த கிரண் ட்விட்டரில் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை ட்விட்டரே கதி என்று இருக்கிறார் கிரண். வீட்டில் முடங்கியிருப்பதால் மன அழுத்தம் இருக்கும், அதனால் ட்வீட் செய்கிறார் என்று கூட சொல்லலாம். ஆனால் தினமும் கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிடுகிறார்.
நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகிறது. கிரண் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுபவர்கள் கூட சில நேரங்களில் கடுப்பாகி போதும், போதும் ஓவராக போய்கிட்டு இருக்கு என்று தெரிவித்துள்ளனர்.

சில புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் நெளிகிறார்கள். சும்மா ட்விட்டர் பக்கம் வரும்போது இந்த புகைப்படங்கள் கண்ணில் படுகின்றன. இதை நாங்கள் பார்க்கும் போது எங்க வூட்டுக்காரம்மா வந்தால் தீபாவளி தான். இந்த கிரணுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை போன்று. பணம் பற்றிய கவலை இல்லாததால் தானே இப்படி தினமும் வீட்டில் போட்டோஷூட் நடத்துகிறார். எத்தனையோ பேர் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்க கிரணோ கவர்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்.
இப்படி கசமுசா புகைப்படங்களை வெளியிடுவதற்கு பதில் நாலு பேருக்கு உதவி செய்யலாமே என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். கிரணை அப்படி ஒன்றும் படங்களில் பார்க்க முடியவில்லை. அப்படி இருந்தும் இந்த அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறதா என்று சிலர் வியந்து கமெண்ட் போட்டுள்ளனர்.

கிரணை விளாசுபவர்கள் விளாசினாலும் அவரை ஊக்குவிப்பவர்கள் ஊக்குவிக்கத் தான் செய்கிறார்கள். வாவ், அந்த சட்டை போட்ட புகைப்படம் செம, இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். வீட்டிலேயே இந்த அளவுக்கு திறமையாக போட்டோஷூட் நடத்துகிறீர்கள். உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. இன்று என்ன ஸ்பெஷல் என்று பார்க்க ட்விட்டருக்கு ஓடோடி வரும் எங்களை ஏமாற்றாத தலைவி கிரண் வாழ்க என்று வாழ்த்தியும் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்