ஆப்நகரம்

தம்பியை வைத்து இயக்கும் டைரக்டர்!

தான் இயக்கும் படத்தில் தன் தம்பியையும் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர் விஜய் மில்டன்.

TOI Contributor 30 May 2016, 2:56 pm
தான் இயக்கும் படத்தில் தன் தம்பியையும் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர் விஜய் மில்டன்.
Samayam Tamil two bharaths in vijay miltons next
தம்பியை வைத்து இயக்கும் டைரக்டர்!


விஜய் மில்டன் இயக்கும் ‘கடுகு’ படத்தில் ராஜகுமாரன் நாயகனாகவும், பரத் வில்லனாகவும் நடிக்கிறார்கள் என்பதுதான் அனைவரும் அறிந்ததே. அறியாதது, விஜய் மில்டனின் தம்பியும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ‘கடுகு’ படம் கிராமத்து கதை.

கிராமத்தில் புலி வேஷம் போடுகிற ஏழை கலைஞனாக ராஜகுமாரன் நடித்துள்ளார். கிராமத்தின் பாடி பில்டராக வரும் பரத் வில்லன். இவர்களுடன் விஜய் மில்டனின் தம்பி பாரத் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். அவர் நடிக்கும் முதல் படம் இது என்றும் கூறப்படுகிறது. ‘கடுகு’ படத்தில் ராஜகுமாரனை சிரிக்கவே விடவில்லையாம் இயக்குனர். அவரது கதாபாத்திரம் அப்படி என்றாலும் சிரிக்காத ராஜகுமாரன் திரையில் எப்படி ஜொலிப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்