ஆப்நகரம்

ஒரே கதையில் தனித்தனியாக இரு மெகா ஸ்டார்கள் நடிக்கும் படம்!

ஒரே கதையில், இரு படங்களில் நடிகர்கள் மோகன்லாலும், மம்முட்டியும் தனித்தனியாக நடிக்கவுள்ளனர்.

TNN 8 Nov 2017, 3:59 pm
ஒரே கதையில், இரு படங்களில் நடிகர்கள் மோகன்லாலும், மம்முட்டியும் தனித்தனியாக நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil two mega star acting in a single story
ஒரே கதையில் தனித்தனியாக இரு மெகா ஸ்டார்கள் நடிக்கும் படம்!


ஒரே நேரத்தில் ஒரே கதையை இரண்டு பேர் ஒரே காலகட்டத்தில் படமாக்குவது ஆச்சர்யமான விஷயம். முதன் முறையாக மலையாள சினிமாவிலும் இப்படி ஒரு விஷயம் நடக்கவுள்ளது. ‘குஞ்சாலி மரைக்காயர் ஐ.வி-’ என்கிற வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவித்தார்.

ஏற்கனவே இந்தக்கதையில் நடிகர் மோகன்லால் நடிப்பதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கப்போவதாகவும் பேசப்பட்டு வந்தது.

இப்போது இந்தப் படத்தில் மம்முட்டி நடிப்பதால், மோகன்லால் படம் கைவிடப்படுமோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் மோகன்லால், மம்முட்டி இருவரும் தனித்தனியாக நடிக்க ‘குஞ்சாலி மரைக்காயர்’ கதை தனித்தனி படங்களாக உருவாக உள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்