ஆப்நகரம்

இரண்டு விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!!

பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரனை டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்டு இருந்த 2 விஜய் ரசிகர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.

TNN 9 Aug 2017, 4:31 pm
பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரனை டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்டு இருந்த 2 விஜய் ரசிகர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
Samayam Tamil two vijay fans booked on criminal offence
இரண்டு விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!!


நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை விட சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜாப் ஹாரி மெட் செஜல் மோசமாக இருந்தது என்று சமூக வலைத்தளத்தில் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிக்கையாளர் தன்யாவின் புகைப்படங்களை இணைத்து ஆபாச தகவல்களை இணையத்தில் பதிவேற்றினர். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். விஜய் தனது ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட 2 விஜய் ரசிகர்கள் மீது இன்று ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

two vijay fans booked on criminal offence

அடுத்த செய்தி

டிரெண்டிங்