ஆப்நகரம்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும்: உதயநிதி ஸ்டாலின் உறுதி!

'நெஞ்சுக்கு நீதி' படம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Samayam Tamil 25 Oct 2021, 12:18 pm
சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்னர் தொகுதி பணிகளில் பிசியானார். இதனால் அவர் கமிட் ஆன படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
Samayam Tamil Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin


அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த 'ஆர்டிகள் 15' படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரிக்கிறார்.

இசை பிரளயத்திற்கு தயாராகும் ஏ.ஆர். ரஹ்மான்: பார்த்திபன் நெகிழ்ச்சி!
அண்மையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் 'நெஞ்சுக்கு நீதி' டைட்டில் வெளியாகி வைரலானது. கலைஞரின் பிரபலமான நூலின் பெயரை படத்தின் தலைப்பாக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'நெஞ்சுக்கு நீதி' ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


இந்தப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்கள். மு.மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே' என்ற த்ரில்லர் படத்திலும் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஹாரர் படமான 'ஏஞ்சல்' படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்