ஆப்நகரம்

Thalapathy vijay: உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்..சிக்கலில் வாரிசு..!

துணிவு படத்திற்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்க உதயநிதி முயற்சி செய்து வருவதாக தகவல்

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 4 Dec 2022, 8:27 am

ஹைலைட்ஸ்:

  • உதயநிதியின் பிளான்
  • சிக்கலில் வாரிசு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil உதயநிதி
விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரையில் வெளியாகவுள்ளது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இப்படம் ஒரு செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகி வருவதாகவும், விஜய் படங்களிலிருந்து இப்படம் சற்று மாறுபட்டு இருக்கும் என்ற தகவலினால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Rajini: ரஜினியின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்..ஓப்பனாக பேசிய பிரபலம்..!

இந்நிலையில் அதே சமயத்தில் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகின்றது.


அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் மோதவுள்ளன. இந்நிலையில் துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகம் செய்யவுள்ளது. அதைப்போல வாரிசு திரைப்படத்தை லலித் குமார் வாங்கி வெளியிடுகிறார்.


இந்த சமயத்தில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என உதயநிதி கூறிவந்தார். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்திற்கு அதிக திரைகள் கிடைக்க உதயநிதி முயற்சி செய்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறிவருகின்றார்.


அதாவது உலகமே எதிர்பார்க்கும் அவதார் 2 படத்தை உதயநிதி தான் தமிழ்நாட்டில் வாங்கி வெளியிடுகிறார். அந்த படத்தை திரையிட திரையரங்கங்கள் போட்டி போட்டு வரும் சூழலில் உதயநிதி, அவதார் 2 படத்தை நான் உங்களுக்கு தரவேண்டும் என்றால் பொங்கலுக்கு உங்கள் திரையில் துணிவு படத்தை தான் திரையிடவேண்டும் என கூறிவருகின்றாராம்.


எனவே இவ்வாறு உதயநிதி பல திரைகளை வளைத்துப்போட பிளான் போட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்