ஆப்நகரம்

பேனர் விவகாரம்: வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Nov 2018, 11:50 am
பேனர் விவகாரத்தில் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 04MP-udhay1jpg
பேனர் விவகாரம்: வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!


சென்னை வானகரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வரவேற்று சாலை நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதை சுட்டிக் காட்டிய நெட்டிசன் ஒருவர் ’எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.


இந்நிலையில், இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காது என தனது டுவிட்டரில் உறுதியளித்துள்ளார். இதற்கு திமுகவினர் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்