ஆப்நகரம்

விஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.

தன் மகன் விஜய் மற்றும் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர்.

Samayam Tamil 20 Nov 2019, 4:04 pm
உலக நாயகன் கமல் ஹாஸனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ரஜினி, கமல் அரசியலில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
Samayam Tamil vijay


மேலும் அவர்கள் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும் என்றார். எஸ்.ஏ.சி. பேசியதை பார்த்தவர்கள் அவர் தன் மகன் விஜய்யை பற்றி தான் சூசகமாக பேசுகிறார் என்றார்கள். அப்பா பேச்சு வாக்கில் நச்சுன்னு நங்கூரம் மாதிரி மகனுக்காக ஒரு பாயிண்ட் விட்டாரு பார் என்று விமர்சனம் எழுந்தது.

2வது கணவருக்கு முத்தம் கொடுத்து டிக்டாக்: மைனா நந்தினியை விளாசும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் இது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

நான் மேடையில் பேசியது விஜய்யை மனதில் வைத்து அல்ல. என் பேச்சுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. நானும், அவரும் பொதுவாகவே அரசியல் குறித்து பேசிக் கொள்ள மாட்டோம். ஊழல் இல்லா அரசு வர ரஜினியும், கமலும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சொந்தமாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு விஜய் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது என்றார்.

தம்பிகளுக்கும் வழிவிடுங்க: விஜய்க்கு கமல், ரஜினியிடம் பரிந்துரைத்த எஸ்.ஏ.சி.

முன்னதாக பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் இறங்க முடியாமல் இல்ல, வேணாம்ணு இருக்கேன் என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay இறங்க முடியாமல் இல்ல, வேணாம்னு இருக்கேன்: பன்ச் விட்ட விஜய், என்ன நடக்கப் போகுதோ?

அடுத்த செய்தி

டிரெண்டிங்