ஆப்நகரம்

நான் இயக்கிய காட்சிகளை பயன்படுத்தக்கூடாது - நோட்டீஸ் அனுப்பிய பாலா!

தற்போது உருவாகி வரும் படத்தில் நான் இயக்கிய காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பிரபல முன்னணி இயக்குனர் பாலா.

Samayam Tamil 20 May 2019, 5:06 pm
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது தன் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தன் மகன் துருவ்வையும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதன் முயற்சிதான் ‘வர்மா’ படம். இது தோல்வியில் முடிந்தது.
Samayam Tamil aadhithya-varma


தற்போது ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் நடித்து வருகிறார் நடிகர் துருவ். இந்தப் படத்தை தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குனரின் உதவியாளர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா, நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய படம் சரியில்லை என கூறி மொத்த படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர்.

தற்போது உருவாகி வரும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் நான் இயக்கிய ‘வர்மா’ பட காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்