ஆப்நகரம்

பேட்ட படப்பிடிப்பில், ரஜினிக்கு பாதுகாப்பு அளித்த உ.பி. அரசாங்கம்!

ரஜினியின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதால் அவருக்கு உத்தரப்பிரதேச அரசாங்கம் 25 போலீசாரை பாதுகாப்புக்காக நியமித்துள்ளனர்.

Samayam Tamil 10 Sep 2018, 7:23 pm
ரஜினியின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதால் அவருக்கு உத்தரப்பிரதேச அரசாங்கம் 25 போலீசாரை பாதுகாப்புக்காக நியமித்துள்ளனர்.
Samayam Tamil petta 3


நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘பேட்ட’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.

ஒருமாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திரப் பிரதேச அரசு ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனராம். அங்கு ‘பேட்ட’ படத்திற்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்