ஆப்நகரம்

நில மோசடி விவகாரம்: காமெடி நடிகர்கள் கோர்ட்டில் ஆஜர்!

நில மோசடி விவகாரம் தொடர்பாக பிரபல காமெடி நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

TNN 20 Apr 2017, 5:32 pm
நில மோசடி விவகாரம் தொடர்பாக பிரபல காமெடி நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
Samayam Tamil vadivelu and singamuthu present in land acquisition case
நில மோசடி விவகாரம்: காமெடி நடிகர்கள் கோர்ட்டில் ஆஜர்!


காமெடி நடிகர்கள் வடிவேலு & சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இடையில் வர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக, தன்னை மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் வடிவேலு. இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஏப்., 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதோடு வடிவேலு மற்றும் சிங்கமுத்துவை நேரில் ஆஜராக சொல்லி நீதிபதி முரளிதரண் உத்தரவிட்டடிருந்தார். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் வருகிற ஏப்., 20-ம் தேதி வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நேரில் ஆஜராக வேண்டும், இல்லையேல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.

இதையடுத்து வடிவேலுவும், சிங்கமுத்துவும் இன்று கோர்ட்டில் ஆஜராகினர். இருவரும் சமரச முடிவை கோர்ட்டில் தெரிவிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் சமரசம் ஆகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்