ஆப்நகரம்

Vadivelu: இதுவரை பட்டதெல்லாம் போதும்டா சாமி: வடிவேலு அதிரடி முடிவு

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் படாதபாடு பட்ட வடிவேலு இனி வரலாற்று படங்கள், ஷங்கர் படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருக்கிறார்.

Samayam Tamil 12 Sep 2021, 4:35 pm
இனிமேல் ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்கப் போவது இல்லை என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vadivelu decides to stay away from historic movies
Vadivelu: இதுவரை பட்டதெல்லாம் போதும்டா சாமி: வடிவேலு அதிரடி முடிவு



வடிவேலு

சிம்புதேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து கண் கலங்கினார் வடிவேலு. தற்போது அந்த பிரச்சனை தீர்ந்து மீண்டும் நடிக்க வந்துவிட்டார். சுராஜ் இயக்கும் நாய் சேகர் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு.

படங்கள்

செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு கூறியதாவது, நான் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சபாஷ் கரணாக மாறிவிட்டார். இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி, மக்களுக்கு நன்றி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

ஷங்கர்

எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வெடி வைத்தார்கள். அனைத்திலும் தப்பிவிட்டேன். என் மீது சுமதப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய். இனி ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்கவே மாட்டேன். மேலும் வரலாற்று படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறினார் வடிவேலு.

பிறந்தநாள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரை விரைவில் பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களும் கூட தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்