ஆப்நகரம்

வடிவேலு ரிட்டர்ன்ஸ்.. சிம்பு படத்தில் ஒப்பந்தம்?

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார்.

Samayam Tamil 11 Mar 2020, 10:15 am
2017ல் வெளிவந்த மெர்சல் படத்திற்கு பிறகு வடிவேலு எந்த புதிய படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். அவர் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க துவங்கினார். ஆனால் அதில் இனி நடிக்க முடியாது என திடீரெனெ அவர் வெளியேறியதால் தயாரிப்பாளர் சங்கத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார்.
Samayam Tamil Vadivelu


இந்த பிரச்சனை பற்றி விசாரணை செய்ய தயாரிப்பாளர் சங்கம் பலமுறை அழைத்தும் வடிவேலு வராததால் அவரை வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அப்போது முதல் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை வடிவேலு. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த படம் தற்போதைக்கு துவங்கும் அறிகுறி இல்லை.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் நடிகர் சிம்புவை வைத்து இயக்கும் புது படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கிவந்த மிஸ்கின் அதில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக திடீரென விலகிக்கொண்டார். ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் மீதமுள்ள படத்தை எடுத்து முடிக்க 40 கோடி ரூபாய் கேட்டார் என செய்திகள் வந்தது. அதை ஏற்றுக்கொள்ளாத விஷால் தானே மீதி படத்தை இயக்குவதாக முடிவெடுத்துவிட்டார்.

இதை தொடர்ந்து தான் மிஸ்கின் சிம்புவை நேரில் சந்தித்து கதை கூறியுள்ளார். அது பிடித்துவிட்டதால் மாநாடு பட ஷூட்டிங் முடிந்ததும் அதில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் தான் வடிவேலுவை முக்கிய ரோலில் நடிக்க கேட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கோவில் படத்தில் சிம்பு-வடிவேலு இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்