ஆப்நகரம்

Naai Sekar Returns: வைகைப்புயலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்: கலக்கலாய் வெளியான அறிவிப்பு.!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Nov 2022, 7:44 am
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார் வடிவேலு. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil நாய் சேகர் ரிட்டன்ஸ்
நாய் சேகர் ரிட்டன்ஸ்


தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஆரம்பத்தில் நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான படத்திற்கு இதே பெயர் தலைப்பாக வைக்கப்பட்டதால், வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர் தோல்வியிலிருந்து தப்பித்தாரா சந்தானம்: 'ஏஜென்ட் கண்ணாயிரம்' பட விமர்சனம்.!

இந்நிலையில் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் ரிலீசாக இருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Suriya 42: பிரம்மாண்டமாக உருவாக போகும் 'சூர்யா 42': வெளியான வேறலேவல் அப்டேட்.!

இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பிரபுதேவா நடனம் அமைத்த இந்தப்பாடலை பாடியிருந்தார். அண்மையில் வெளியான அப்பத்தா பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்