ஆப்நகரம்

கருணாநிதி சமாதிக்கு பால் ஊற்றி மரியாதை செய்த கவிஞர் வைரமுத்து !

மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செய்தார்.

Samayam Tamil 9 Aug 2018, 11:38 am
மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டஇடத்தில்கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செய்தார்.
Samayam Tamil vairamuthu


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மரணம் தமிழகத்தையேஉலுக்கியது. ஓமந்தூரில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மம்தா பேனர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமாத்துறை பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 4 மணியளவில் அவரது உடல் ராஜாஜி அரங்கிலிருந்து மெரினாவிற்கு ராணுவாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கலைஞரின் குடும்பத்தினர் அவருக்கு இறுதிமரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து 21 குண்டுகள்முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் புதைக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அந்த இடத்தில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து, அவரது மகன்கள்மதன் கார்க்கி மற்றும் கபிலன்ஆகியோர்கருணாநிதியின் சமாதிக்கு நேரில் வந்துபால் ஊற்றி மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவைரமுத்து கூறியதாவது ‘கருணாநிதி இல்லாத தமிழத்தை நினைத்து பார்க்கமுடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவதுதமிழ் சமுதாயத்தின் கடமை. தந்தைக்குசெய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்ற வந்தேன். சூரியன் இல்லாமல் இனி விடியல் இருக்குமா என்பதை போல உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்