ஆப்நகரம்

வலிமை ஷூட்டிங் தள்ளிப் போகிறது? காரணம் இது தான்

வலிமை பட ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்த திட்டத்தை படக்குழு ஒரு புது முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 Mar 2020, 10:54 am
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கிவரும் இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil Valimai Ajith and H.Vinoth


ஐதராபாத்தில் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்தது. அதை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை நடத்தினர். அப்போது தான் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது என்று கூட செய்திகள் வந்தது.

இந்நிலையில் அடுத்து வெளிநாடுகளில் மிக பிரம்மாண்டமாக சில சண்டை காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார். ஸ்பெயின், மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் மிக வித்யாசமான இடங்களில் காட்சிகளை எடுக்க முடிவு செய்திருந்தார் அவர்.

தீரன் படத்தில் பாலைவனத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்தது போல வலிமை படத்திலும் முயற்சிக்க விரும்பி, ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளில் சில இடங்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் ஹெச்.வினோத்.

அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு அங்குதான் செல்லவிருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் வலிமை படக்குழு வெளிநாடு ஷூட்டிங்கை சில மாதங்கள் தள்ளி வைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங்கும் ரத்தானது குறிப்பிடத்தக்கது. பூனே, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் படம் இயக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் சிவா, கொரோனா வைரஸ் பரவும் காரணமாக வட இந்தியா ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ஹைதராபாத்திலேயே செட் போட்டு படமாக்க முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்