ஆப்நகரம்

‘வல்லவன்’ படக்கதை: சிம்பு மீது நடிகை புகார்!!

‘வல்லவன்’ படக் கதையை சிம்பு என்னிடம் சொன்னது போல் எடுக்காமல் வேறு கோணத்தில் படமாக்கினார் என்று பிரபல நடிகை சந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 28 Dec 2018, 4:22 pm
‘வல்லவன்’ படக் கதையை சிம்பு என்னிடம் சொன்னது போல் எடுக்காமல் வேறு கோணத்தில் படமாக்கினார் என்று பிரபல நடிகை சந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil Sandhya


பி.எல். தேனப்பன் தயாரிப்பில் சிம்பு இயக்கத்தில் 2006ல் வெளியான படம் ‘வல்லவன்’. இந்தப் படத்தில் சிம்பு, நயன்தாரா, ரீமாசென், சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்புவின் தோழியாக நடித்த நடிகை சந்தியா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘இப்படத்தில் என்னிடம் சொன்ன கதையில் இருந்து முற்றிலும் வேறு கதையை தான் படமாக்கியுள்ளனர். என்னிடம் சொன்ன கதையில் எனக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் இருக்கும் என்று ரீமாசென் சந்தேகப்பட்டு என்னை கடத்துவார். ஆனால் படமாக்கப்பட்டது வேற கதை. . இந்தப் படத்தை சிம்புதான் இயக்கினார். மேலும் அப்படத்தின் படப்பிடிப்பில் எந்தவொரு ஒழுக்கமும் இல்லை. ஷூட்டிங் 8 மணிக்கு என்று சொன்னால் 11, 12 மணிக்கு தான் ஆரம்பிக்கும். ஆனால் சிம்புவை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும்’’ என்றார் .

ஏற்கனவே வல்லவன் படம் தொடர்பாக சிம்பு மீது தேனப்பன் புகார் கூறி இருந்த நிலையில் தற்போது நடிகை சந்தியாவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்