ஆப்நகரம்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் படப்பிடிப்பைத் தொடர்ந்த ‘வணங்காமுடி’!

காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ‘வணங்காமுடி’ படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் ஆரம்பமாகியுள்ளது.

TOI Contributor 15 Sep 2017, 8:21 pm
காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ‘வணங்காமுடி’ படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் ஆரம்பமாகியுள்ளது.
Samayam Tamil vanangamudi shooting in tuticorin
வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் படப்பிடிப்பைத் தொடர்ந்த ‘வணங்காமுடி’!


நடிகர் அஜீத்தை ‘அமராவதி’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா. தற்போது இவர் ‘வணங்காமுடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி, சிம்ரன், தம்பி ராமய்யா, கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இமான் இசை அமைக்கிறார், சென்னையில் இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தூத்துக்குடியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது பெப்சி வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால் தூத்துக்குடியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவக்கியுள்ளது படக்குழு. அடுத்ததாக கொடைக்கானலிலும், சென்னையிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்