ஆப்நகரம்

எட்டி உதைக்கும் காட்சியில் அப்பா ஞாபகம் வந்தது... இசை வெளியீட்டு விழாவில் பொளந்துகட்டிய வனிதா!

தில்லு இருந்தா போராடு படத்தில் எட்டி உதைக்கும் காட்சியின் போது தனது அப்பாவின் ஞாபகம்தான் வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jan 2022, 1:23 pm
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான வனிதா, திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி, குடும்பம் குழந்தைகள் என இருந்து வந்தார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததை அடுத்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.
Samayam Tamil Vanitha Vijayakumar Movie audio launch


இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதன்மூலம் மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த அவருக்கு தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் வனிதா நடித்து வரும் தில்லு இருந்தா போராடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய வனிதா, சிறு வயதிலேயே சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து அதில் இருந்து விலகி முட்டாள்தனமான முடிவை எடுத்து விட்டேன். ஆனால் இப்போது ஆண்டவன் திரும்பவும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.


இந்த படத்தில் புடவை கட்டிக்கொண்டு புல்லட்டில் வருவது போலவும், அதை எட்டி உதைப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சியில் நடிக்கும்போது எனது அப்பாவின் ஞாபகம் வந்தது. அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன். நான் விஜயகுமார் பொண்ணு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன்.

அப்பாவை போல பல விருதுகள் வாங்கி, அவர் நடித்தது போல பல கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் கிட்ட நல்ல நடிகை என பெயர் எடுப்பேன் என்றார்.கடந்த வருடம் மட்டும் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் எனக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டம்கொடுத்த மீடியாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்