ஆப்நகரம்

எங்க அம்மா இறந்த பிறகு என் அப்பா என்னை ஒதுக்கி விட்டார்: விஜயகுமாரின் மகள் வனிதா!

எங்க அம்மா இருக்கும்வரையில் அப்பா விஜயகுமார் அமைதியாக இருந்தார். ஆனால் இறந்தபின்பு என்னை ஒதுக்கத்தொடங்கிவிட்டார் என்று விஜயகுமாரின் மகள் வனிதா புகார் கூறி வருகிறார்.

Samayam Tamil 25 Sep 2018, 6:43 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவர் மட்டுமல்ல இவரது மனைவி மஞ்சுளா உட்பட குடும்பமே பல வருடங்களாக சினிமாவில் நடித்துவருகின்றனர். இந்த தம்பதிக்கு அருண் விஜய், வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி என 4 பிள்ளைகள் உள்ளனர்.
Samayam Tamil vanitha-vijayakumar


இவர்களில் வனிதாவுக்கு திருமணமாகி பின்னர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி தனது அப்பா விஜயகுமாருடன் சண்டையிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் மஞ்சுளாவின் பெயரில் உள்ள வீட்டிலிருந்து வெளியேற மறுத்தார். பின்னர் போலீசார் உதவியுடன் விஜயகுமார் அவரை வெளியேற்றினார்.

இந்த சம்பவம் பற்றி வனிதா கூறுகையில், ‘‘என்னுடைய குடும்பம் எப்போதுமே என் மீது மட்டும் காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகிறது. என் அம்மா முன்னாடியே, என் அப்பாவிடம் நான் உங்களுக்குத்தான் பிறந்தேனா என்று கேட்டேன். அதற்கு எங்க அம்மா ஒன்றும் பேசமுடியாமல் இருந்தார்கள்.
எங்க அம்மா இருக்கும் வரையில் அப்பா அமைதியாக இருந்தார். ஆனால் இறந்தபின்பு என்னை ஒதுக்கத்தொடங்கிவிட்டார். என்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்தேன். நான் சொத்தில் உரிமை கேட்கவில்லை. ஆனால் வசிக்கக்கூடாது என்று கூறுவதை தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை’’ என்றார் வனிதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்