ஆப்நகரம்

Vanitha Vijaykumar: என்னை ஏமாற்றிய பாவிகளை மன்னித்துவிட்டேன்: வனிதா பரபரப்பு ட்வீட்.!

வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Jul 2022, 7:54 am
நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Vanitha Vijaykumar
Vanitha Vijaykumar


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிய வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சினிமாவிலும் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்தார். தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் தனது குடும்பத்தினரை விட்டு விலகி இருக்கும் வனிதா, அண்மையில் வெளியான அருண் விஜய் நடிப்பில் வெளியான 'யானை' படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், மதிப்புமிக்க பொருட்கள், சொத்துக்களை எதிர்பார்க்காத குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் பல லட்சியங்களை வைத்து இருக்கிறார்கள்.

Ilaiyaraaja: ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்: இளையராஜாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்.!

அவர்களும் என்னைப் போல் தலை நிமிர்ந்து உழைத்து சாதிப்பார்கள். குடும்ப ஆதரவு இல்லாமல் சுயமாக உழைத்து முன்றேறி வந்த பெண்கள். அன்பாக எங்களை நேசிப்பவர்களையும் நாங்கள் நேசிக்கிறோம். இணையத்தில் சில செய்திகள் பரவி வருவதைப் பார்த்து ... நான் என் வலியையும் துயரத்தையும் விட்டுவிட்டு ஒரு பெரிய சிறந்த மனிதனாக மாறிவிட்டேன். வாழ்க்கையில் பாவம் செய்த, என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய , என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன்.


எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மறப்போம் மன்னிப்போம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது யாருக்கான பதிவு என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்