ஆப்நகரம்

வனிதா எனக்கு இன்னொரு அம்மா என்ற பீட்டர் பால்: இது விஜய் டயலாக்னு கலாய்

வனிதா விஜயகுமார் தனக்கு இன்னொரு அம்மா என்று தெரிவித்துள்ளார் பீட்டர் பால்.

Samayam Tamil 31 Aug 2020, 1:24 pm
வனிதா விஜயகுமாரின் கணவரான பீட்டர் பாலுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு பீட்டர் பால் வீடு திரும்பினார்.
Samayam Tamil peter paul


தன் கணவர் நல்லபடியாக வீடு திரும்பியதை ட்விட்டரில் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார் வனிதா. அவரின் ட்வீட்டை பார்த்த ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தார்கள். வீடு திரும்பிய பீட்டர் பால் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

வனிதாவின் யூடியூப் சேனலில் வெளியான அந்த வீடியோவில் பீட்டர் பால் கூறியதாவது,

எனக்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போச்சு. ராமசந்திரா மருத்துவமனையில் தான் அட்மிட் ஆகியிருந்தேன். பரிபூரணமாக குணமாகி வீடு திரும்பினேன். அதற்காக ராமசந்திரா மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வதந்திகள் எல்லாம் பார்த்தேன். தயவு செய்து எதையும் நம்பாதீர்கள். அது உண்மை கிடையாது. நான் நலமாக இருக்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இன்று நான் வீட்டிற்கு திரும்பி வந்து உங்களிடம் எல்லாம் பேச முக்கியமான காரணம் வனிதா தான். நான் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டார். அப்ப தான் நினைச்சேன், வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று.

நான் தனியாக இருந்த காலத்தில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டு பேச்சுலர் மாதிரி வாழ்ந்தேன். அது எல்லாம் தான் தற்போது என்னை அஃபெக்ட் செய்துள்ளது. இப்போ உண்மையான பாசம் கிடைக்கும்போது நான் கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். வனிதா இல்லை என்றால் நான் இல்லை. எனக்கு இன்னொரு அம்மா மாதிரி இருந்து பார்த்துக் கொண்டார் என்றார்.

பீட்டர் பால் பேசியதை பார்த்த வனிதாவின் ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,

வனிதாக்கா உங்களுக்கு மனைவியாக கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அவர் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்டார். இனியாவது அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

வனிதா இன்னொரு அம்மாவா?. இது தெறி படத்தில் விஜய்ணா சமந்தாவிடம் கூறும் வசனம் ஆச்சே. அட்லி பட வசனத்தை சுட்டுட்டார் பீட்டர் பால் என்று கூறியுள்ளனர்.

தன் திருமணத்தை பற்றி விமர்சித்தவர்களை விளாசி வந்தார் வனிதா விஜயகுமார். இதனால் ட்விட்டரில் ஒரே மோதலாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வனிதா யார் தன்னை பற்றி என்ன சொன்னாலும் கண்டு கொள்வது இல்லை. தன் யூடியூப் சேனல், சமையலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், முதல்வரிடம் புகார்: வனிதாவை பதற வைத்தது யார் தெரியுமா?

இதற்கிடையே யாரோ ஒருவர் வனிதா விஜயகுமார் பெயரில் போலி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இது குறித்து அறிந்த வனிதா பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்