ஆப்நகரம்

27ம் தேதி கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்படி பண்ணலாமா வனிதா?: ரசிகர்கள்

வனிதா விஜயகுமார் தன் வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Jun 2020, 3:30 pm
வனிதா விஜயகுமார் தன் அம்மா மஞ்சுளா வழியில் நடிகையானார். விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு வனிதா நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனையும், ஜோவிகா என்கிற மகளையும் பெற்றெடுத்தார்.
Samayam Tamil vanitha vijayakumar


அதன் பிறகு ஆகாஷுடன் பிரச்சனை ஏற்படவே விவாகரத்து பெற்றார் வனிதா. விஜய ஸ்ரீஹரி தனக்கு அம்மா வேண்டாம் என்று கூறி அப்பாவுடன் இருக்கிறார். ஆகாஷை பிரிந்த வனிதா ராஜன் என்பவரை மறுமணம் செய்தார். அவர்களுக்கு ஜெய்நிதா என்கிற மகள் பிறந்தார். பின்னர் ராஜனும், வனிதா விஜயகுமாரும் பிரிந்துவிட்டனர்.

ராஜனை பிரிந்த வனிதா மகள்களை தனியாளாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் வனிதாவுக்கும், இயக்குநர் பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வனிதா, பீட்டரின் திருமணம் சென்னையில் எளிமையாக நடக்கவிருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வனிதா, பீட்டரின் திருமணம் வீட்டில் தான் நடக்கிறது. வனிதாவுக்கு மீண்டும் திருமணம் நடக்கவிருப்பதில் அவரின் மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெய்நிதாவுக்கு தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக தனியாக போராடிய அம்மாவுக்கு ஒரு துணை வரப் போகிறது என்று அவர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதனால் தான் உங்கள் அம்மாவை நான் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பீட்டர் பால் கேட்டவுடன் ஓகே என்று கூறியிருக்கிறார்கள்.

மகள்கள் தன்னை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருப்பதை நினைத்து பூரித்துப் போயிருக்கிறார் வனிதா விஜயகுமார். திருமணத்தை முன்னிட்டு வனிதா தன் வருங்கால கணவர் பீட்டர் பாலுடன் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். பாஸ் வாங்க சென்றபோது பீட்டருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வனிதா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த வனிதாவின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அக்கா, உங்களை இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த திருமணமாவது கடைசி வரை நிலைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். உங்களின் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க. உங்களுக்கு ஏற்றவராக இருக்கிறார் பீட்டர் பால்.

நாளை மறுநாள் கல்யாணத்தை வைத்துக் கொண்டு இப்படியா வெளியே செல்வது. இது போன்ற நேரத்தில் வெளியே சுற்றக் கூடாது. வீட்டிலேயே இருங்கள். கல்யாணப் பெண் வெளியே செல்லக் கூடாது என்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இது லாக்டவுனில் உருவான காதல் போன்று என்று முதலில் ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இது லாக்டவுன் காதல் கிடையாது. படம் தொடர்பாக வனிதா கடந்த டிசம்பர் மாதம் தான் பீட்டர் பாலை முதல் முறையாக சந்தித்திருக்கிறார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்திருக்கிறது. மேலும் வனிதா யூடியூப் சேனல் துவங்கியதற்கு பீட்டர் பால் தொழில்நுட்ப உதவி செய்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்