ஆப்நகரம்

இவங்களுக்கு நிச்சயம் கொரோனா வரணும்.. வரலக்ஷ்மி சரத்குமார் கோபமான பேச்சு

பெங்களூரில் போலீஸ் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ பற்றி கோபமாக ட்விட் செய்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

Samayam Tamil 26 Mar 2020, 2:28 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil Varalaxmi Sarathkumar angry tweet


ஆனால் அதையும் தாண்டி வெளியில் சுற்றுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து லத்தியால் அடிக்கும் விடியோக்கள் அதிகம் வெளியாகி கொண்டிருக்கிறது.

மருத்துவ சேவை செய்யும் டாட்டர்களும் போலீஸ் அடியில் இருந்து தப்பவில்லை. மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை போலீஸ் ஒருவர் லத்தியால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. "நான் டாக்டர் சார்" என கூறிய பிறகு, 'அதை முதலில் சொல்ல மாட்டீர்களா' என போலீஸ் கேட்கின்றனர்.

மேலும் பெங்களூரில் போலீஸ் ஒருவரை சில நபர்கள் சேர்ந்து தாக்கும் மற்றொரு வீடியோவும் வைரலாகி உள்ளது. வெளியில் வந்தவர்களை தடுத்த போலீஸ் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

"என்ன முட்டாள்தனம் இது..!! போலீஸ் அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம்வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு இப்படி தான் உங்கள் நன்றியை காட்டுவீர்களா. இவர்களுக்கு கொரோனா வைரஸ் நிச்சயம் வரணும். அந்த போலீஸ் அதிகாரியிடம நான் அந்த முட்டாள்களின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்