நடிகை வரலட்சுமி, 7 கிமீ நடந்தே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களை, தனது காரில் ஏற்றி பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், ‘போடா போடி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்தப் படங்கள் சரிவர ஓடாததால், தற்போது படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், படப்பிடிப்பின் போது, பள்ளி மாணவர்கள் 7 கி.மீ தூரம் பொடி நடையாக நடந்து செல்வதை பார்த்துள்ளார். இதையடுத்து, அவர்களை தனது காரிலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை தூரம் நடந்து சென்று கல்வி கற்கும் இவர்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. அவர்களை இன்று எனது காரில் ஏற்றிச் சென்றேன். அவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோஷமும், உற்சாகமும் எனது மனதை உருக்கியது.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், ‘போடா போடி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்தப் படங்கள் சரிவர ஓடாததால், தற்போது படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், படப்பிடிப்பின் போது, பள்ளி மாணவர்கள் 7 கி.மீ தூரம் பொடி நடையாக நடந்து செல்வதை பார்த்துள்ளார். இதையடுத்து, அவர்களை தனது காரிலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை தூரம் நடந்து சென்று கல்வி கற்கும் இவர்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. அவர்களை இன்று எனது காரில் ஏற்றிச் சென்றேன். அவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோஷமும், உற்சாகமும் எனது மனதை உருக்கியது.” என தெரிவித்துள்ளார்.