ஆப்நகரம்

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: வெங்கட் பிரபு

சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மே மாதம் முதல் தொடங்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2019, 10:33 pm
நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசன் திருமண வரவேற்பில் பங்கேற்ற கையோடு, ‘மாநாடு’ படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil மாநாடு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை பதிவிட்ட வெங்கட் பிரபு
மாநாடு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை பதிவிட்ட வெங்கட் பிரபு


அண்மையில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியானது. மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை இயக்குநர் மற்றும் நடிகரின் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த கூட்டணி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ள சிம்பு, தற்பொது உடல் எடை குறைந்து சகோதரர் குறளரசன் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அதே நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, மே மாதம் ‘மாநாடு’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்