ஆப்நகரம்

நிதின் சத்யா தயாரிப்பில் கெட்ட போலீசாக நடிக்கும் வெங்கட் பிரபு!

நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2019, 3:51 pm
நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil police


இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அவரது நண்பர் நிதின் சத்யா தயாரிக்கிறார். இது இவரது 2ஆவது படம். இதற்கு முன்னதாக ஜருகண்டி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

நிதின் சத்யாவின் 2ஆவது படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், ஈஸ்வரி ராவ் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதில், வைபவ் மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடிக்க, மற்றொரு முக்கிய பிரபலம் வெங்கட் பிரபுவும், இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆம், அதுவும் வில்லத்தனம் கலந்த கெட்ட போலீசாக நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு நடித்த இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்கே நகர் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர, காட்டேரி, சிக்சர் ஆகிய படங்களிலும் வைபர் நடித்து முடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்